
தமது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு அவதூறு ஏற்படுத்தவில்லை என்று முன்னாள் சட்டத்துறை தலைவர் டான்ஸ்ரீ தோமி தோமஸ் தனது தற்காப்பு வாதம் அளவில் குறிப்பிட்டுள்ளார். நியாயமான கருத்து என்ற அடிப்படையில் சில தகவல்களை மட்டுமே அந்த புத்தகத்தில் எழுதியிருக்கிறேன். மாறாக அவருக்கு அவதூறு ஏற்படுத்தவில்லை என்று டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தொடுத்துள்ள அவதூறு வழக்கு தொடர்பாக தனது தற்காப்பு வாதத்தில் டான்ஸ்ரீ தோமி தோமஸ் தெரிவித்துள்ளார்.
