
உலகையே உலுக்கிய வரும் ஒமிக்ரோன் வைரஸ் எதிரொலியால் 48 நாடுகளைச் சேர்ந்த சுற்றுப் பயணிகள் லங்காவி தீவுக்கு வர அனுமதி இல்லை என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. ஒமிக்ரோன் வைரஸ் அபாயம் தொடர்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 48 நாடுகளில் 22 நாடுகள் ஒமிக்ரோன் வைரஸ் தொற்று அதிகமாக உள்ளது. மற்ற 26 நாடுகளில் ஒமிக்ரோன் வைரஸ் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. ரஷ்யா, போலந்து, உக்ரைன், சுலோவேக்கியா, குரோசியா, ஃபிரான்ஸ் உட்பட தென்னாப்பிரிக்கா நாடுகளில் ஒமிக்ரோன் வைரஸ் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
