
மலேசிய ஓட்டப்பந்தய சங்கத்தின் ஏற்பாட்டில் நாட்டில் இளம் ஓட்டப்பந்தய விளையாட்டு வீரர்களை உருவாக்கும் பயிற்சி தற்போது தேசிய புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெற்று வருகிறது. இளம் ஓட்டப்பந்தய விளையாட்டாளர்களுக்கு எந்த வகையில் பயிற்சி வழங்குவது மற்றும் அவர்களின் திறனை வெளிப்படுத்துவது தொடர்பில் இந்த பயிற்சி அமைந்திருப்பதாக மலேசிய ஓட்டப்பந்தய சங்கத்தின் தலைவர் டத்தோ எஸ் எம் முத்து தெரிவித்தார். மூன்று தினங்களுக்கு நடைபெறும் இந்த பயிற்சிப் பட்டறையில் 35 பயிற்றுநர்கள் கலந்து கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.
