
நாட்டில் இதுவரை மொத்தம் 2 கோடியே 27 லட்சத்து 7 ஆயிரத்து 144 பெரியவர்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2 கோடியே 30 லட்சத்து 39 ஆயிரத்து 780 பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.
இதற்கிடையில், 12 முதல் 17 வயது வரையிலான இளையோர்களில் 27 லட்சத்து 16 ஆயிரத்து 48 பேர் தடுப்பூசியை முழுமையாகப் முடித்துள்ள வேளையில் 28 லட்சத்து 26 ஆயிரத்து 761 பேர் குறைந்த பட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
