
கடுமையான சித்திரவதைக்கு ஆளான ஐந்து வயது சிறுவன் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் காதல் ஜோடி தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக ஜொகூர் இஸ்கந்தார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர் டிஸூல்கையிர் தெரிவித்தார். ஜொகூர் பாரு சுல்தானா ஆமினா மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் வழியிலேயே அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான் இந்த சிறுவனின் உடல் முழுவதும் மோசமான காயங்கள் காணப்பட்டுள்ளன. கடுமையான சித்ரவதைக்கு ஆளானதால் இந்த சிறுவன் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் வளர்ப்புத் தாயாரும் அவரின் காதலரும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அவர் சொன்னார்.
