
விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் டிசம்பர் 7ஆம் தேதியிலிருந்து 31ஆம் தேதி வரை, கோழி , முட்டை , காய்கறிகள் உட்பட அத்தியாவசிய பொருட்களுக்கு உச்சவரம்பு விலையை அரசாங்கம் நிர்ணயிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பண்ணை, மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரம் ஆகிய நிலைகளுக்கான கோழி மற்று முட்டைக்கான விலை விரைவில் அறிவிக்கப்படும் என்று உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் விவகார அமைச்சர் டத்தோ அலெக்சண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார். காய்கறிகளின் பட்டியலில் பயிற்றாங்காய், சிவப்பு மிளகாய், தக்காளி, கடுகுக் கீரை, முட்டைக்கோஸ், வெள்ளரிக்காய் உச்சவரம்பு விலை பட்டியலில் சேர்த்து கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.
