
இந்தோனேசிய பணிப்பெண்ணை பாலியல் வன்முறை செய்ததாக பேராக் மாநில துரோனோ சட்டமன்ற உறுப்பினர் போல் யோங் வழக்கில் இன்று காலையில் ஈப்போ உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறுகிறது. இந்த குற்றச்சாட்டில் இருந்து அவர் விடுவிக்கப்படுவாரா அல்லது தற்காத்துக் கொள்ளும்படி உத்தரவிடப்படுவாரா என்பது இன்று தெரிந்து விடும். கடந்த ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி தொடங்கப்பட்ட இவ்வழக்கின் விசாரணையில் 23 பேர் சாட்சியம் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
