
வரும் டிசம்பர்-12 ஆம் தேதி தலைநகரில் நடைபெறவிருக்கும் ம.இ.காவின் 78 வது பொதுப் பேரவையைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கிறார். இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்கு சில முக்கிய அறிவிப்புகளை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டுத் திட்டவரைவு புளூ பிரிண்ட் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் அன்றைய தினம் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், ம.இ.கா தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணன் இருவரும், அரசாங்கத்திடம் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளதாகவும், அது தொடர்பான அறிவிப்பையும் பிரதமர் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
