
வரும் ஜனவரி 18 ஆம் தேதி நடைபெறும் தைப்பூசத்தை முன்னிட்டு கோலாலம்பூரில் இருந்து பத்துமலை முருகன் திருத்தலத்தை நோக்கி வெள்ளி ரதம் புறப்படும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம் சரவணன் தெரிவித்தார். வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் இக்கூட்டத்தில் இதுகுறித்து பேசப் போவதாக அவர் சொன்னார். எஸ்ஓபி விதிமுறைகளுக்கு உட்பட்டு எந்த வகையில் தைப்பூசத்தை கொண்டாடலாம் என்பது குறித்தும் தேசிய பாதுகாப்பு மன்றத்துடன் கலந்து பேசி அறிவிக்கப்படும். தைப்பூசத்திற்கான ஏற்பாடுகள் இப்போது நடைபெற்று வருகின்றன. ஆகவே தைப்பூசம் தொடர்பில் அவசர முடிவுகள் எடுக்க தேவையில்லை. அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
