
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுங்கை சிப்புட் திடலில் நடைபெற்ற பரபரப்பான நட்பு முறை ஆட்டத்தில் பேரா கிந்தா இந்தியன்ஸ் காற்பந்து குழுவுடன் சுங்கை சிப்புட் ஸிக்கோ மரடோனா கால்பந்து கிளப் மோதியது. சுங்கை சிப்புட் வட்டாரத்தில் நன்கு பிரபலமான ஜஸ் செண்டோல் உரிமையாளர் இராமச்சந்திரன் சிறப்பு வருகை புரிந்து போட்டியைத் தொடங்கி வைத்தார். பேராக் மாநிலத்தில் பிரபலமான முன்னாள் ஆட்டக்காரர்கள் இந்த போட்டியில் பங்கேற்று அசத்தினர். இறுதியில் கிந்தா இந்தியன்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கிண்ணத்தை வாகை சூடியது என்று ஸிக்கோ மரடோனா கால்பந்து கிளப் அதிகாரி அப்பளநாயூடு தெரிவித்தார்.

