27.8 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

குறுகிய காலத்தில் தேர்தலை நடத்த அம்னோ விரும்பவில்லை

நாட்டின் 15ஆவதுப் பொதுத்தேர்தல் குறுகியக் காலத்தில் நடத்தப்படாது, மாறாக அடுத்தாண்டு ஜூலை மாதத்திற்குப் பிறகு நடத்துவதில் அம்னோ உயர்மட்டத் தலைமைத்துவம் ஒருமனதாக இருக்கிறது என்று கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர், டத்தோ டாக்டர் அஷ்ராஃப் வாஜ்டி டுசுக்கி தெரிவித்தார். இது குறித்து அண்மையில் நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. பொதுத்தேர்தல் வரும் ஜூலை மாதத்திற்குப் பிறகு நடத்தப்பட வேண்டும். எனினும், அம்னோவின் தேர்தலுக்கு முன்பாக நடத்தப்பட வேண்டும் என்பதில் நாங்கள் ஒருமனதாக இருக்கிறோம் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles