
சரவாக் மாநிலத்தில் உட்புற பகுதிகளில் பின் தங்கியிருக்கும் வாக்காளர்கள் மக்கள் பிரதிநிதிகளின் கைகளில் இன்னமும் முத்தம் கொடுத்து வருவது வேதனையாக இருக்கிறது என்று கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். மக்கள் இன்னமும் பின் தங்கியே உள்ளனர். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அவர்களின் நலனில் அக்கறை கொள்ளவில்லை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சாடியுள்ளார். சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர்கள் ஆதரித்து டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
