
சாலை போக்குவரத்து குற்றங்களுக்கு 80 விழுக்காடு சலுகை வழங்கப்பட்டுள்ளதால் இதனை கட்டுவதற்கு மக்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். கடந்த மூன்று நாட்களில் அதாவது நேற்று வரை 82,230 பேர் அபராதம் செலுத்தி யுள்ளனர். இதன் மூலம் 4 கோடியே 60 லட்சம் வெள்ளி வசூல் செய்யப்பட்டிருப்பதாக கோலாலம்பூர் சாலை போக்குவரத்து தலைவர் ஷாரிபுடின் முகமட் சாலா தெரிவித்தார். வரும் டிசம்பர் 15 ஆம் தேதி வரை இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
