
அம்பாங்கில் உள்ள வர்த்தகரிடம் 10 லட்சம் வெள்ளி கொள்ளை அடித்த சம்பவம் தொடர்பில் ஒரு அமலாக்க அதிகாரி மற்றும் மேலும் இருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரி மற்றும் இருவர் தங்களை அமலாக்க அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு வர்த்தகரின் வீட்டை சோதனையிட்டனர். சுமார் பத்து லட்சம் வெள்ளி கொள்ளையிட்ட பின்னர் அவர்கள் மூவரும் தப்பி ஓடினர். வர்த்தகர் போலீசில் புகார் செய்ததை தொடர்ந்து இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
