
நாட்டிலுள்ள பெரியவர்களில் 97.3 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 27 லட்சத்து 72 ஆயிரத்து 882 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 98.7 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 811 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இது தவிர 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 89.7 விழுக்காட்டினர் அல்லது 28 லட்சத்து 24 ஆயிரத்து 847 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட வேளையில் 86.5 விழுக்காட்டினர் அல்லது 27 லட்சத்து 23 ஆயிரத்து 137 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
