
சாலைகளைப் பராமரிப்பது தொடர்பான புதிய தொழில்நுட்பங்களை குத்தகையாளர்கள் அறிந்து கொள்ள சிலாங்கூர் மாநில அரசு உதவி புரியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள சாலைகள் சிறப்பான தரத்தையும் பயனீட்டாளர்களுக்கு சொகுசான பயண அனுபவத்தையும் வழங்குவதற்கு புதிய தொழில்நுட்ப பயன்பாடு பெரிதும் துணை புரியும் என்று ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சியினர் இஷாம் ஹஷிம் கூறினார். உதாரணத்திற்கு, நான்காம் தொழில் புரட்சி யுகத்தில் சாலைகளின் நிலையைக் கண்டறிவதற்கு ரோபோட்டிக் எனப்படும இயந்திர மனிதர்களைப் பயன்படுத்தலாம் என்று அவர் சொன்னார்.
