
சிலாங்கூர் மாநிலத்தில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளம் காரணமாக பல சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில மாநில காவல் இலாகா தெரிவித்துள்ளது. பெட்டாலிங் ஜெயா, வடக்கு கிள்ளான், சுங்கை பூலோ, சுபாங் ஜெயா, கோலா லங்காட், சிப்பாங் மற்றும் ஷா ஆலம் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் இதில் அடங்கும். இதற்கிடையே சிலாங்கூரில் மாநிலத்தில் 4,596 பேர் 55 நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
