
நாளையும் நாளை மறுநாளும் தீபகற்ப மலேசியாவில் இடியுடன் கூடிய கனத்தமழை பெய்யலாம் என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது. இதனால் வட மாநிலங்களில் வசிப்பவர்கள் நடப்பு வானிலை நிலவரம் தொடர்பில் எப்போதும் முழு விழிப்பு நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் இரு தினங்களாக பெய்த அடைமழையால் சிலாங்கூர், கோலாலம்பூர், பகாங், கிளாந்தான், திரெங்கானு, நெகிரி செம்பிலான் உட்பட பல மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



