
இடியுடன் கூடிய கனத்த மழை பெய்யும் என்று வானிலை மோசமாக இருந்தால் தமான் ஸ்ரீ முட மக்கள் வெளியேற்றப் படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தற்போது தங்கள் வீடுகளில் கூடியிருக்க அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒருவேளை வானிலை மோசமான நிலைக்கு வருமானால் இங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்படுவார்கள். மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வானிலை அறிக்கையை கண்காணித்து வருகிறோம். நிலைமை மோசம் என்றால் தாமான் ஸ்ரீ மூடா மக்கள் வெள்ள நிவாரண மைதானங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் பஹாருடின் தெரிவித்தார்.
