
நாட்டில் அதிகரித்துக் கொண்டிருக்கும் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மக்கள் நடமாட்டம் உத்தரவு கீழ் Sop விதிமுறைகள் கடுமையாக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டில் முழு அடைப்பு போடப்படும் என்று நாட்டு மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு முழுஅடைப்பு இல்லை இருப்பினும் Sop விதிமுறைகள் மிக கடுமையாக்கப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. எஸ்ஓபி விதிமுறைகள் கடுமையாக்கப்படுவது தொடர்பில் நாளை தற்காப்பு துறை hi அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
