
நாட்டில் இந்த ஒரு வருடத்தில் நோய்த்தொற்று அதிகளவில் பரவி இருக்கிறது.
இதற்கு அரசாங்கம் முழு பொறுப்பேற்க வேண்டும் என்று ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன் வலியுறுத்தினார். சிங்கப்பூர்,தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளைக் காட்டிலும் மலேசியாவில் நோய்தொற்று மிக மோசமான நிலையை எட்டியிருக்கிறது.
மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்தோனேசியாவை விட மலேசியாவில் நோய்த் தொற்று பாதிப்பு மோசமான கட்டத்தை எட்டி இருக்கிறது என்றார் அவர்
நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதில் தோல்வி கண்டிருக்கும் அரசாங்கம் இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என முன்னாள் மனிதவள அமைச்சருமான அவர் வலியுறுத்தினார். Image Credit : Moganraj Villavan
