
சிலாங்கூரிலும் பகாங்கிலும் பெரிய அளவு வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது. இம்மாநில மக்கள் பெரிய அளவு தங்களின் உடமைகளும் வாழ்வாதாரத்தை இழந்து பரிதவிக்கிறார்கள். கருணை ஓவியம் இயக்கத்தின் தலைவர் முருகேசன் மற்றும் வர்ணிலா 21 என்ற இரு இயக்கத்தின் வழி நேற்று வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டது. துணிமணிகள், போர்வைகள், மெத்தைகள், தலையணைகள், துடைப்பம் மோப், மளிகை பொருட்கள், குழந்தைகளுக்கு உடைகள், கைக்குழந்தைகளுக்கு நேப்கின்கள், வீட்டை சுத்தப்படுத்த சவர்க்காரங்கள், ஷாம்பூ, மருந்துகள், பால் மாவு, தைலங்கள், போன்ற பவவகையான பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி உதவி புரிந்தோம் என்று டாக்டர் பரிமளா தெரிவித்தார். எங்கள் இயக்கத்திற்கு பணம், பொருள்கள் மற்றும் வாகனம் உதவி புரிந்த நல்ல உள்ளங்களுக்கு இதன் வழி நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் சொன்னார்.
