
கோவிட்-19 நோய் பதிப்பால் இறந்தவர்களுக்காக அறிவிக்கபட்ட சிறப்பு நிதி அறிவித்தபடி இன்னும் அந்த குடும்பங்களுக்கு சென்று அடையமால் இருப்பது ஏன் என்று ஜொகூர் ஜசெக கிளைத் தலைவர் சந்திர சேகரன் ஆறுமுகம் கேள்வி எழுப்பியுள்ளார். அண்மைய பட்ஜெட்யில் கோவிட் 19 நோயால் பாதித்தவர்களுக்கும், அந்த நோயால் இறந்தவர்களுக்கும் இந்த சிறப்பு நிதிக்கு மனு செய்யலாம் என அறிவிக்கபட்டது என்பதை அனைவரும் அறிந்ததே. ஆனால்,அறிவித்தபடி மனு செய்தவர்களுக்கு அந்த நிதி இன்னும் கிடைக்காதது பல ஜயங்களை ஏற்படுத்துவதாக அவர் சொன்னார். உதவி என்பது வெறும் அறிவிப்போடு நின்று விடமால் அது மக்களுக்கு சென்று அடைய வேண்டும் என்பதை கவணத்தில் கெண்டால் அனைத்து தரப்புக்கும் நண்மை என சந்திர சேகரன் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
