
நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தினால் ஷா ஆலம் தாமான் ஸ்ரீ முடாவில் ஆயிரக்கணக்கான வீடுகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டன. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்யும் பணியில் பொதுமக்களும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் அரிமா எனப்படும் மலேசியா இந்தியர் மறுமலர்ச்சி இயக்கத்தின் விலாயா மாநில தலைவர் ஜேம்ஸ் செல்வராஜா , அரிமா இயக்கத்தின் செயலாளர் பிரகாஷ் ராவ் மற்றும் சமூக சேவையாளர் செல்வராஜா தலைமையில் அரிமா இயக்கத்தினர் வீடுகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
