
நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகாங் மற்றும் சிலாங்கூர் மாநில மக்களுக்கு ஜெயம் நம்நாடு இயக்கம் பல உதவிகளை வழங்கி வருகிறது. பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கு தன்னலம் கருதாமல் சேவையாற்றி வரும் ஜெயம் நம்நாடு இயக்கத்தின் தலைவர் டாக்டர் குமரேந்திரன் தலைமையில் ஜெயம் நம்நாடு இயக்கத்தினர் மிக மோசமான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட காராக் வட்டாரத்தில் தாமான் மக்மோர், புக்கிட் டிண்டிங் தோட்ட மக்களுக்கும் சிலாங்கூர் உலுலங்காட் தாமான் நண்டிங்ஸ் மக்களுக்கும் நேரடியாக களம் இறங்கி உணவு பொருட்களையும் வீட்டிற்கு தேவையான பொருட்களையும் வழங்கி பேருதவி புரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
