
வெள்ளம் காரணமாக ஷா ஆலம் வட்டாரத்தின் பல்வேறு பகுதிகளில் குவிந்து காணப்ப்படும் குப்பைகள் விரைந்து அகற்றப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். பாடாங் ஜாவாவில் வட்டாரத்தின் ஒரு பகுதியில் குப்பைகள் அகற்றப்படுவதற்கு முன்னரும் அகற்றப்பட்ட பின்னரும் உள்ள காட்சியை சித்தரிக்கும் புகைப்படங்களை அமிருடின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அப்பகுதியில் 20 நிமிடங்களில் குப்பைகள் அகற்றப்பட்டு இடம் முற்றிலும் சுத்தப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
