
நேற்று இரண்டு மணி நேரம் வரை பெய்த கனமழையால் உலுலங்காட்டில் உள்ள சுங்கை லங்காட் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெஸ்ட் கன்ட்ரி, தாமான் லெம்பா மேவா உட்பட பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஆனால் மழை நின்றதும் வெள்ளம் குறைய ஆரம்பித்தது. கனத்தமழை பெய்யலாம் என்பதால் காஜாங் வட்டாரத்தில் உள்ள மக்கள் விழிப்புடன் இருக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே கூட்டரசு சாலைகளில் உள்ள கால்வாய்கள் சுத்தம் செய்யப்படாத காஜாங்கில் வெள்ள ஏறியதாக காஜாங் சட்டமன்ற உறுப்பினர் ஹி லோய் சான் தெரிவித்தார்.
