
சிலாங்கூரின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த வாரம் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளிலிருந்து 13,699 டன் குப்பைகளை கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மேண்ட் நிறுவனம் அகற்றியுள்ளது. மாநில அரசின் அந்த துணை நிறுவனம் மேற்கொண்ட இந்த பணிகளுக்கு உண்டான செலவு 60 லட்சத்து 31 ஆயிரம் வெள்ளியாகும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். துப்புரவுப் பணி தொடரும் காரணத்தால் குப்பைகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
