
தொடர்மழையின் காரணமாக ஏழு மாநிலங்களைச் சேர்ந்த தாழ்வான பகுதிகளில் வெள்ள நீரின் அளவு உயர்ந்துள்ளதால் அங்கெல்லாம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். சபா, மலாக்கா, ஜோகூர், பகாங், நெகிரி செம்பிலான், கிளந்தான், திரங்கானு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் துயர் துடைப்பு மையங்களை தஞ்சம் அடைவது அதிகரித்து வருகிறது. மக்கள் விழிப்புடன் இருக்கும்படியும் பயணம் மேற்கொள்ள வேண்டி இருந்தால் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.



