
பகாங் வனத்துறை, நடப்பு பருவமழை காலத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மாநிலத்தில் மரம் வெட்டும் நடவடிக்கைக்கு தற்காலிக தடை விதித்துள்ளது.
மறு உத்தரவு வரும்வரை மாநிலத்தில் அனைத்துவிதமான வெட்டுமர பணிகளும் ‘1984 தேசிய வன பாதுகாப்புச் சட்டத்தின்’படி முடக்கி வைக்கப்படுவதாக வனத்துறை இயக்குநர் முகமட் ஹிசம்ரி யாசின் தெரிவித்துள்ளார்.
டெலிமோங் வட்டாரத்தில் மரங்களை வெட்டும் நடவடிக்கை சட்ட விரோதமாகவும் கட்டுப்பாடின்றியும் மேற்கொள்ளப்படுவதால் ஏராளமான மரக்கழிவுகள் கிடப்பதாக பரவலாக புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
