
இந்தியாவில், 15 முதல் 18 வயதிற்கு உட்பட்டோருக்குத் தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று அந்த வயதுப் பிரிவைச் சேர்ந்த 16 லட்சம் மேற்பட்டோர் முதல் தவணைத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டனர். மருத்துவமனைகள், சுகாதார மையங்களுடன் பெரும்பாலான பள்ளிகளும் கல்வி நிலையங்களும் தடுப்பூசி மையங்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 2007ஆம் ஆண்டிலும் அதற்குமுன் பிறந்தோரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தகுதிபெற்றுள்ளனர்.
