
ஐநா மன்றத்தின் அகதிகளுக்கான உயர் ஆணையத்தின் அடையாள அட்டையைக் கொண்டிருக்கும் மியன்மார் ரொகின்யா மக்கள், மலேசியாவை சட்ட ஒழுங்கற்ற நாடாக கருதவும் கூடாது; வரம்பு மீறவும் கூடாது என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் எச்சரித்துள்ளார். உண்மையில் அந்த மக்கள்மீது மலேசியா பரிவும் அக்கறையும் கொண்டுள்ளது. அதற்காக, அவர்கள் வரம்பு மீறவோ பிடிவாதம் காட்டவோக் கூடாதென்றும் அவர் சுட்டிக்காட்டினார். மலேசியா, மனித நேய அடிப்படையில் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து உதவிக்கரம் நீட்டியுள்ளது. இந்த நிலையில், அந்த மக்கள் எல்லை மீறினால் உள்ளே வைக்கப்படுவார்கள் என்றும் அவர் நினைவுறுத்தினார்.



