
சிலாங்கூர் மாநிலத்தில் கிள்ளான் மற்றும் செந்தோசா வட்டாரத்தைச் சேர்ந்த மக்களுக்கு மலேசியத் தமிழர் சங்கத்தின் உறுப்பினரான சமூக சேவகி அஞ்சலை தொடர்ந்து உதவிகளை வழங்கி வருகிறார். பொது இயக்கங்கள் மற்றும் தொண்டூழிய இயக்கங்கள் தன்னிடம் வழங்கும் பொருட்களை சமூக சேவகி அஞ்சலை பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரடியாக ஒப்படைத்து வருகிறார். கடந்த மூன்று வாரங்களாக இவர் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு சளைக்காமல் உதவிகளை செய்து வருவதை செந்தோசா வட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் பாராட்டுகிறார்கள்.



