
சிலாங்கூர் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட ஜனவரி மாதத்திற்கான தண்ணீர் கட்டண விலக்களிப்பு குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினரின் சுமையை குறைக்க உதவும். இந்த திட்டத்தை தாம் பெரிதும் வரவேற்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறினார். சிலாங்கூர் எழுச்சிமிகு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த சலுகை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
