
இந்தியாவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில்அலிகார் பல்கழகமும் ஒன்றாகும். அத்தகைய பல்கலைக்கழகத்தை நிறுவியவர்களில் ஒருவர் ஃபாத்திமா ஷேக். இந்தியாவில் முதல் முஸ்லிம் பெண் ஆசிரியரும் இவர்தான். ஏழை, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக ஒதுக்கப்பட்ட-புறக்கணிக்கப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் அதனிலும் குறிப்பாக சிறுபான்மைச் சமுதாயங்களைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி வாய்ப்பு என்பது குதிரைக் கொம்புதான். 20-ஆம் நூற்றாண்டில்கூட இந்த நிலைமைதான். இப்படிப்பட்ட நிலையில், 19-ஆம் நூற்றாண்டில் பல தடைகளைக் கடந்து முதல் முஸ்லிம் ஆசிரியராக உருவான ஃபாத்திமா ஷேக்கை, சமுதாயம் புறக்கணித்து விட்டது; மறந்தும் விட்டது; ஆனால், கூகுல் நிறுவனம் அவரைப் போற்றும்விதமாக அவரின் 191-ஆவது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் அவருக்கு கவனஈர்ப்பு சித்திரம்(டூடுல்) வெளியிட்டுள்ளது.
