
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையில் மலேசியா 13-ஆவது இடத்தில் இருப்பதாக நிக்கீ குறியீடு தெரிவிக்கிறது. கொரோனா தாக்கத்தில் இருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாக்க கடந்த இரு வருடங்களாக பெரும் போராட்டத்தை நடத்திவரும் மலேசியா, அதற்கான நிக்கீ தரவரிசையில் இந்த இடத்தைப் பெறுவதற்கு துணை நின்ற அனைத்து தரப்பினரையும் கவனத்தில் கொள்கிறது என்று சுகாதார தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார். ஆசிய, மேற்குலக நாடுகள் சம்பந்தப்பட்ட இந்த தர வரிசையில் மலேசியா 66.5 புள்ளிகளைப் பெற்றவேளையில், 82 புள்ளிகளுடன் பாஹ்ரைன் முதல் இடத்தில் உள்ளது.
