
மலேசிய மக்கள் கட்சியின் நிகழ்ச்சியில கலந்து கொண்ட மேநாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப், நாட்டில் நடைமுறையில் உள்ள நடமாட்ட கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பன்றவில்லை என்பதால் இதன் தொடர்பில் விசாரணையைத் தொடங்கி உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். நஜீப் கலந்து கொண்ட நிகழ்ச்சி தொடர்பான ஒரு காட்சி, @knowledge9701 என்ற பயனீட்டாளர்வழி கீச்சகத்தில் பரவியதைத் தொடர்ந்து டாங் வாங்கி மாவட்ட காவல் துறையினர் இது குறித்து விசாரிக்கத் தொடங்கினர் என்று அதன் தலைவர் நூர் டெல்ஹான் தெரிவித்தார். கோலாலம்பூர், சௌக்கிட், துன் இஸ்மாயில் சாலையில் நடைபெற்ற அந்த சம்பவம் குறித்துதான் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்
