
தடுப்பூசியை முழுமையாக போட்டுக் கொள்ளாதவர்களை உம்ரா யாத்திரைக்காக சௌதி அரேபிய நாட்டிற்கு பயண ஏற்பாட்டு முகவர்கள் அழைத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடாமல் உம்ரா பயணியர் எப்படி மெக்காவிற்குள் நுழைந்தனர்? அவர்கள் முறையாக சோதிக்கப்படாமல் போனது எப்படி என்பதை யெல்லாம் கண்டறிய முழு விசாரணை நடத்தப்பட வேண்டுமென , சமய விவகாரங்களுக்கு பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர் Idris Ahmad உத்தரவிட்டுள்ளார். இத்தகைய கடுமையான தவற்றை செய்த மத போதகரை முழுமையாக விசாரிக்கும்படியும் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
