
மஇகா வரலாற்றில் நீண்ட காலம் இரண்டாம் இடத்தை தக்கவைத்துக் கொண்டிருந்த டான்ஸ்ரீ எஸ்.சுப்ராவின் மகன் டத்தோ எஸ். சுந்தர், அரசியல் தடம் மாறுகிறார். மஇகா மத்திய செயலவையில் இருமுறை உறுப்பியம் பெற்றிருந்த சுந்தர், வாரிசான் கட்சியில் இணைகிறார். மத்திய முன்னாள் அமைச்சரும் சபா மாநில மேநாள் முதல்வருமான டத்தோஸ்ரீ ஷாஃபி அப்டால் தலைமையிலான கட்சி எல்லை கடந்து இப்பொழுது தீபகற்ப மலேசியாவிலும் கால் பதிக்கிறது. இந்தக் கட்சியின் கொள்கையும் தொலைநோக்குப் பார்வையும் பலஇனப் பாங்கும் தன்னைக் கவர்ந்துள்ளதாக சுந்தர் தெரிவித்தார்.
