
ஊழல் தடுப்பூ ஆணையத்தின் தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ அஸாம் பாக்கி நிறுவனப் பங்குகளை வாங்கியது தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கெடா ஜெராய் கெஅடிலான் தொகுதி தலைவர் பூபாலன் கேட்டுக் கொண்டுள்ளார். அஸாம் பாக்கியை போலீஸ் துறை அல்லது நாடாளுமன்ற சிறப்பு குழு விசாரணை நடத்தப்பட வேண்டும். மாறாக ஊழல் தடுப்பு ஆணையம் அவரை விசாரணை நடத்த அனுமதிக்கக் கூடாது என்று அவர் கேட்டுக்கொண்டார். அந்த ஆணையத்தின் உயர்மட்டத் தலைவர் சம்பந்தப்பட்ட விவகாரமாக இது உள்ளதால் போலீஸ் மற்றும் நாடாளுமன்ற சிறப்பு குழு விசாரிக்கப்பட வேண்டும். மற்ற தரப்பினர் விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக எம்.ஏ.சி.சி. இவ்விவகாரத்திலிருந்து தற்காலிகமாக விலகியிருக்க வேண்டும். எம்ஏசிசி விசாரணையை மேற்கொண்டால் அந்த விசாரணை நீதியாக இருக்காது என்று அவர் சொன்னார். அஸாம் பாக்கியை போலீஸ் விசாரணை செய்ய வேண்டும் என்று போலீசில் புகார் செய்ததாக பூபாலன் தெரிவித்தார்.




