
ஆஃப்கானிஸ்தான் அண்மையில் அமையப்பெற்ற தலிபான் அரசாங்கம் குறித்து முடிவு எடுப்பதற்காக, இஸ்லாமிய ஒத்துழைப்பு இயக்கம்-ஓஐசி எடுக்க இருக்கும் முடிவுக்காக மலேசிய அரசு காத்திருக்கிறது. தலிபான் அரசாங்கத்தின்மீது இனிமேல்தான் முடிவு எடுக்க இருக்கும் மலேசிய அரசு, அந்த துடுக்குத் தன ஆட்சியாளர்களை எச்சரிக்கை உணர்வுடன் அவதானித்து வருகிறது என்று வெளியுறவு அமைச்சர் சைபுடின் அப்துல்லா தெரிவித்துள்ளர். தற்போதையை தலிபான் அரசாங்கத்தை அங்கீகரிப்பதற்கான எந்த நிலையையும் எடுக்காத மலேசிய அரசு, இந்த விசயத்தில் அவசரம் காட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



