
மலேசிய இந்துப் பெருமக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் அனைவருக்கு ஏஎஸ்டி செய்தித்தளம் இனிய போகிப் பண்டிகை வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறது. உழவுத் தொழில் புரிவோர் உலகுக்கு அச்சாணி என்று சொன்ன வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க, வேளாண் தொழிலை வழிவழியாக மேற்கொண்டிருந்த தமிழர்கள் அறுவடைத் திருநாளாம் பொங்கல் நந்நாளை கொண்டாடுவதற்கு முதல் நாள் வீட்டைத் தூய்மைப் படுத்தி மார்கழித் திங்களின் நிறைவு நாளில் போகித் திருநாளை கொண்டாடுவது வழக்கம். அதைப்போல நாமும் மனதைப் புதுப்பித்து நாளை மலரும் 2053 திருவள்ளுவர் ஆண்டையும் பொங்கல் திருநாளையும் வரவேற்க அணியம் பெறுவோம். அனைவருக்கும் மீண்டும் போகிப் பண்டிகை வாழ்த்துகள்!
