
தைப்பூச ரதம் ஊர்வலத்திற்கான கட்டுப்பாட்டு விதிமுறைகள் விவேகமற்றதாக இருப்பதோடு வாக்குறுதி அளித்தபடி நடந்துகொள்ளத் தவறிய ஒற்றுமைத்துறை அமைச்சர் ஹலிமா சாதிக்கை பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் டாக்டர் பி.ராமசாமி சாடினார்.
ரதம் ஊர்வலத்தின்போது 500 பக்தர்கள் உடன் செல்வதற்கு இணக்கம் அளிக்கப்படும் என ஹலிமா கோடி காட்டியிருந்தார். ஆனால் நேற்றைய அறிவிப்பில் ரத ஊர்வலத்தில் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என அவர் தெரிவித்தது பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றதையும் அளிப்பதாக ராமசாமி தெரிவித்தார்.
இதற்கு முன் ஆலய நிர்வாகத்தினரிடம் ஹலிமா இணக்கம் தெரிவித்திருந்த SOP க்கு முற்றிலும் மாறுபட்ட நிலையில் அவரது அறிவிப்பு அமைந்திருந்து என்றும் ராமசாமி தமது முகநூல் பதிவில் தீரிவித்திருக்கிறார்.
