
காவல் கைதி கணபதி மரணம் தொடர்பில் முன்னாள் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாடிக் காணொளி ஒன்றை வெளியிட்டார்.
இந்த காணொளி தொடர்பில் அவரிடம் நேற்று போலீசார் 2 மணி நேரம் வாக்குமூலம் பெற்றனர் பின்னர் அவரின் கைத்தொலைபேசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மலேசிய பல்லூடக தொலைத்தொடர்பு ஆணையத்தின் உத்தரவு பெயரில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக சைட் சாடிக் கூறினார். இதுபற்றி இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சைட் சாடிக் கைத்தொலைபேசியை பறிமுதல் செய்யுமாறு எம்சிஎம்சி உத்தரவிடவில்லை. போலீசார் விசாரணைக்கு நாங்கள் ஒத்துழைப்பு கொடுப்போம். ஆனால் அந்த கைத்தொலைபேசியை பறிமுதல் செய்யுமாறு நாங்கள் உத்தரவு பிறப்பிக்கவில்லை என்று அது குறிப்பிட்டுள்ளது.
