
ஊர்விட்டு ஊர்வந்து மனமகிழ் மன்றத்தில் இளைப்பாறிக் கொண்டிருந்த மக்கள் பிரதிநிதி டெரென்ஸ் நாயுடு, பாழாய்ப்போன சிறுநீர்ப் பரிசோதனைக்கு ஆளாகி, நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தார். இப்போது 2-ஆம் கட்ட பரிசோதனையில் இந்த 2-ம் கட்ட சட்டமன்ற உறுப்பினர் தப்பித்துக் கொண்டார் என்று அவரின் வழக்கறிஞரும் ஜசெக எம்பியுமான ராம் கர்ப்பால் சிங் தெரிவித்துள்ளார். பாசிர் பெண்டாமார் ஜசெக சட்டமன்ற உறுப்பினர் டெரென்ஸ் நாயுடுவுக்கு இனி வரும்பொழுதெல்லாம் நல்ல பொழுதாக அமைய ஏஎஸ்டி வாழ்த்துகிறது
