
மலேசிய அரசியலில் தீபகற்ப மலேசியாவில் புது கட்டமைப்பை உருவாக்க வாரிசன் கட்சி முடிவு செய்துள்ளதேத் தவிர, நம்பிக்கைக் கூட்டணி என்ன நினைக்கிறது என்பதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லையென்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஷாஃபி அப்டல் கருத்து தெரிவித்துள்ளார். வாரிசானின் இந்த நடவடிக்கை தீபகற்ப மலேசியாவில் தற்போதுள்ள கட்சிகளுக்கு இடையூறு விளைவிக்கும் என்ற கூற்றை அவர் நிராகரித்தார். எந்த கட்சி அல்லது வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை மக்கள், குறிப்பாக வாக்காளர்கள் முடிவு செய்வார்கள். வாரிசான் கட்சியைப் பொறுத்தவரை, சபா மாநில எல்லையை கடந்து தேசிய அளவில் செயல்பட முனைப்பு காட்டி வருகிறோம்; அவ்வளவுதான் என்று ஷாஃபி மேலும் சொன்னார்.
