
சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் நேற்று இயங்கலை வாயிலாக நடத்தப்பட்ட 2022 சீனப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வை 65,000 பேர் கண்டு களித்தனர். பல் இன மக்களின் கலாச்சார படைப்புகளை உள்ளடக்கிய இந்த நிகழ்வு மாநிலத் தலைவர்களின் முகநூல் மற்றும் மீடியா சிலாங்கூர் வாயிலாக நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. பல்லின மக்களின் பண்பாட்டைப் பிரதிபலித்த படைப்புகள் மலேசியாவின் பன்முகத் தன்மையை வெளிப்படுத்தின.
