
உச்சத்தைத் தொட்டு நிற்கும் யுக்ரேன் நெருக்கடிக்கு, சுமூகமாக தீர்வு காண முடியும் என்று அமெரிக்க, பிரிட்டின் நாடுகளின் சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஐநா-வின் பாதுகாப்பு மன்றமும் இதையே வலியுறுத்தி உள்ளது.
இந்த நிலையில், பிப்ரவரி 16-இல் ரஷ்யா யுக்ரேன் மீது படையெடுக்க வாய்ப்புள்ளது என்று சில மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
யுக்ரேன் அதிபர் விலோடிமிர் ஜெலன்ஸ்கி, நாளை பிப்ரவரி 16-ஆம் நாளில் யுக்ரேன் மக்கள் ஒற்றுமையுடன், தேசிய கொடியை ஏற்றி, நாட்டுப் பண்ணைப் பாட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
