
நம்பிக்கைக் கூட்டணி ஆட்சிக்கு எதிரான ஷெரட்டன் நகர்வுக்கு அம்னோ சார்பில் தலைமை வகித்தவரும் தற்காப்பு அமைச்சருமான டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹூசேன், கோவிட் SOP விதியை மீறியது ஒரு குற்றச் செயல் அல்ல என்று அவரைத் தற்காத்துப் பேசும் பிரதமரின் நடவடிக்கையில் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். SOP விதிமீறலுக்கு பல்லாயிரக் கணக்கில் தண்டம் விதிக்கப்படுகிறது. தனிமைப்படுத்துலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இவை யாவும் பொதுமக்களுக்குத்தானா? இஸ்மாயில் அமைச்சரவை உறுப்பினர்களுக்கு விதிவிலக்கா என்ன? SOP மீறல் குற்றச் செயல் இல்லையென்றால் , பிறகு எதற்கு SOP நடைமுறை? உயர் நெறியுடன் நடந்துக் கொள்ளும் தலைவரே மக்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக திகழ முடியுமென, வலைத்தளவாசிகள் ஆதங்கப்பட்டுள்ளனர்.
