
தலைநகர், செராஸ் வட்டாரத்தில் புதிய ஆண்டு தொடங்கியது முதல் 22 சூதாட்ட மையங்களுக்கு எதிராக போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த நடடிக்கையின்போது 25 பேர் கைது செய்யப்பட்டதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Muhamad Idzam கூறினார். 21 சூதாட்ட மையங்கள் சட்டவிரோதமாக செயல்பட்டுள்ளதால் அவற்றுக்கான மின்சார விநியோகமும் துண்டிக்கப்படும் என அவர் தெரிவித்தார். அந்த சூதாட்ட மையங்களிலிருந்து நான்கு கையடக்க கணினிகள், 12 விவேக தொலைபேசிகள், 100 கணினிகள், வெ.1,626 ரொக்கம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டதாக Muhamad Idzam விவரித்தார்.
